< Back
தேசிய செய்திகள்
இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை மோடி கொடுத்துள்ளார் - யோகி ஆதித்யநாத்
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை மோடி கொடுத்துள்ளார் - யோகி ஆதித்யநாத்

தினத்தந்தி
|
7 July 2023 8:47 PM GMT

இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை மோடி கொடுத்துள்ளார் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜனுபூர் மாவட்டம் வஜித்பூர் பகுதியில் 29 புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவுக்கு புதிய அடையாளத்தை கொடுக்க பிரதமர் மோடி உழைக்கிறார். 9 ஆண்டுகாள வெற்றியை கொண்டாட அவர் இன்று வாரணாசி வந்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா, உத்தரபிரதேசம் மீதான உலகின் பார்வை மாறியுள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்