< Back
தேசிய செய்திகள்
பழங்குடியினருக்கான நினைவிடம், தேசிய நினைவுச்சின்னம் ஆனது - பிரதமர் மோடி அறிவிப்பு
தேசிய செய்திகள்

பழங்குடியினருக்கான நினைவிடம், தேசிய நினைவுச்சின்னம் ஆனது - பிரதமர் மோடி அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Nov 2022 8:51 PM GMT

ராஜஸ்தானில், ஆங்கிலேயே ராணுவத்தால் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கான நினைவிடத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ஜெய்ப்பூர்,

பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மங்காருக்கு சென்றார். அங்கு 1913-ம் ஆண்டு, சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் குரு தலைமையில் போராடிய 1,500 பழங்குடியினரை ஆங்கிலேயே ராணுவம் கொன்று குவித்தது. அவர்களின் நினைவாக மங்காரில் பழங்குடியினர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருடன் ஒரே மேடையில், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், சிவராஜ்சிங் சவுகான், பூபேந்திர படேல் ஆகியோர் பங்கேற்றனர்.

நினைவிடத்தை மேம்படுத்த வேண்டும்

மங்கார் நினைவிடத்தை பிரதமர் மோடி தேசிய நினைவுச்சின்னமாக அறிவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களும் மத்திய அரசின் தலைமையில் ஒன்றிணைந்து மங்கார் நினைவிடத்தை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்த இடத்துக்கு உலக அளவில் ஒரு அடையாளம் கிடைக்கும்.

நாம் அனைவரும் இந்த இடத்தை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்வோம். அதற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினா

மேலும் செய்திகள்