< Back
தேசிய செய்திகள்
பயணிகள் கொடுத்த கொடூர தண்டனை! மரண பீதி அடைந்த திருடன்
தேசிய செய்திகள்

பயணிகள் கொடுத்த கொடூர தண்டனை! மரண பீதி அடைந்த திருடன்

தினத்தந்தி
|
15 Sep 2022 3:14 PM GMT

ரெயில் நிலையத்தில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை திருட நினைத்த திருடனை சக பயணிகள் ரெயில் ஜன்னல் வழியாக லாவகமாக பிடித்து 15 கிமீ தொங்கவிட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் பெகுசாராய் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணி ஒருவரிடம் அவர் வயதில் பயணித்து கொண்டிருக்கும் போது ஒரு திருடன் ரயில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறித்து கொண்டு தப்பிக்க முயற்சித்தான்.

அந்த சமயம் சுதாரித்துக்கொண்ட சக பயணிகள், லாவகமாக ஜன்னல் வழியாக அந்த திருடனின் இரு கைகளையும் பிடித்துவிட்டனர். நகர்ந்தது இதனால் அந்த திருடன் நாள் தப்பிக்கவும் முடியாமல் தொங்கியபடி ரயிலுக்கு வெளியே பயணம் செய்துள்ளன்.

15 கிலோமீட்டர் தொங்கியபடி வந்த திருடன் அடுத்து ரயில் நிலையம் வந்ததும் அப்படியே லாவகமாக பிடித்து ரயில்வே காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டான் திருடன். திருடன் மாட்டிக்கொண்டு பயணிகளிடம் கெஞ்சும் வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்