< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பார்த்தா சட்டர்ஜிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்: கோர்ட் உத்தரவு
|5 Aug 2022 1:34 PM GMT
கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் கைதான பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜி இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடிக்கு மேற்பட்ட ரொக்கமும், இன்னொரு வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டன. ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் சிக்கின. அவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது. அமலாக்கத்துறை காவல் முடிந்ததும் இன்று கோர்ட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க அமலாக்கத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.