< Back
தேசிய செய்திகள்
2024 தேர்தலுக்கான அகிலேஷ் யாதவின் பிடிஏபார்முலா குறித்து மாயாவதி விமர்சனம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

2024 தேர்தலுக்கான அகிலேஷ் யாதவின் 'பிடிஏ'பார்முலா குறித்து மாயாவதி விமர்சனம்

தினத்தந்தி
|
19 Jun 2023 6:03 PM GMT

2024 தேர்தலுக்கான அகிலேஷ் யாதவின் ‘பிடிஏ’பார்முலா குறித்து மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க அகிலேஷ் யாதவ் பரிந்துரைத்த 'பிடிஏ' பார்முலா (பரிவார், தள், அலையன்ஸ்) [குடும்பம்,கட்சி, கூட்டணி] குறித்து உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவருமான மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 'என்டிஏ' (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) எதிர்கொள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் பரிந்துரைத்துள்ள 'பிடிஏ' என்பது இந்த கடினமான காலக்கட்டத்தில் அவர்களுக்கான ஒரு ரைமிங் தானே தவிர வேறு ஒன்றுமில்லை. அவர்களின் பிடிஏவின் அர்த்தம் குடும்பம், கட்சி, கூட்டணி, (பரிவார், தள், அலையன்ஸ்) அதுவும் குறிப்பிட்டக் கட்சிகளின் கூட்டணி. எனவே அவர் குறிப்பிட்டுள்ள வகுப்பு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அதில் மாயாவதி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "மக்களவைக்கு அதிக எம்பிக்களை அனுப்பும் மாநிலத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணியை பிடிஏ - பிச்டே, தலித், அல்பசங்யாக் (பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், மைனாரிட்டிஸ்) கூட்டணி தோற்கடிக்கும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்