< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் பாக். உளவுப்படை ஆதரவு பயங்கரவாத கும்பல் கைது
|14 Aug 2022 8:17 PM GMT
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாத கும்பல் பிடிபட்டது.
சண்டிகார்,
சுதந்திர தினம் நெருங்கிய நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாத கும்பல் பிடிபட்டது. பஞ்சாப் போலீசாரும், டெல்லி போலீசாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கனடாவை சேர்ந்த அர்ஷ் டல்லா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த குர்ஜந்த் சிங் ஆகியோரின் கூட்டாளிகள் ஆவர். அவர்களிடம் இருந்து 3 கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்மூலம், அவர்களின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர்.