< Back
தேசிய செய்திகள்
நர்சை கட்டி போட்டு பலாத்காரம்; மைனர் சிறுவன் உள்பட 4 பேர் வீடியோ எடுத்து மிரட்டல்
தேசிய செய்திகள்

நர்சை கட்டி போட்டு பலாத்காரம்; மைனர் சிறுவன் உள்பட 4 பேர் வீடியோ எடுத்து மிரட்டல்

தினத்தந்தி
|
23 Oct 2022 8:11 AM GMT

சத்தீஷ்காரில் பணியில் தனியாக இருந்த நர்சை கட்டி போட்டு மைனர் சிறுவன் உள்பட 4 பேர் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.



ராய்ப்பூர்,


சத்தீஷ்காரில் மகேந்திரகார் மாவட்டத்தில் சிப்சிப்பி கிராமத்தில் சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நர்சு ஒருவர் வெள்ளி கிழமை மதியம் 3 மணியளவில் தனியாக பணியில் இருந்து உள்ளார்.

இதனை அந்த பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தபோது, கவனித்த 17 வயது மைனர் சிறுவன் உள்ளிட்ட 4 பேர் மையத்துக்குள் புகுந்து, நர்சை கட்டி போட்டுள்ளனர். அதன்பின், அவரது வாயில் துணியை வைத்து அடைத்து விட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி வீட்டுக்கு சென்ற நர்ஸ், தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்பு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, சத்தீஷ்காரில் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டது.

இதனை தொடர்ந்து, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால், தொலைதூர உள்ளடங்கிய பகுதிகளில் பணிபுரியமாட்டோம் என சுகாதார பணியாளர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார், தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். சுகாதார சேவை மையத்தில் பணியில் தனியாக இருந்த நர்சை, அந்த பகுதியில் சுற்றி திரிந்த சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பலாத்காரம் செய்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்