< Back
தேசிய செய்திகள்
இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன - மத்திய அரசு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன - மத்திய அரசு

தினத்தந்தி
|
25 July 2023 9:58 PM GMT

இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சில எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கேட்டிருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அவரது பதிலில் கூறப்பட்டு இருந்ததாவது:-

2,000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் 17-க்கு முன்பு வெளியிடப்பட்டதால் அவற்றின் பயன்பாட்டு காலம் 4 முதல் 5 ஆண்டுகளே என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.

பின்னர் ரிசர்வ் வங்கி நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் இவற்றின் பரிவர்த்தனைக்கு இனி முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டு கடந்த 19-5-2023 அன்றைய திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

மே 19-ந் தேதி ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஜூன் 30-ந் தேதி வரை ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியை (செப்டம்பர் 30-ந் தேதி) நீட்டிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை. இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்