< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
தேசிய செய்திகள்

காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

தினத்தந்தி
|
14 March 2023 3:43 AM GMT

காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ. தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையின் போது பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்