< Back
தேசிய செய்திகள்
கடூர் அருகே  குளத்தில் குதித்து மூதாட்டி தற்கொலை
தேசிய செய்திகள்

கடூர் அருகே குளத்தில் குதித்து மூதாட்டி தற்கொலை

தினத்தந்தி
|
30 July 2023 6:45 PM GMT

கடூர் அருகே குளத்தில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சிக்கபட்டணகெரே கிராமத்தை சேர்ந்தவர் கங்கம்மா (வயது80). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதி அடைந்து வந்தார். இதற்காக கங்கம்மா பல்வேறு ஆஸ்பத்தி்ரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு உடல் நலம் சரியாகவில்லை. இதனால் கங்கம்மா மன வேதனையில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சிக்கபட்டணகெரே கிராமத்தில் உள்ள குளத்திற்கு கங்கம்மா சென்றார். அப்போது அவர் திடீரென குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கங்கம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்