< Back
தேசிய செய்திகள்
பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி
தேசிய செய்திகள்

பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி

தினத்தந்தி
|
13 Aug 2022 9:39 PM GMT

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரூக் அப்துல்லா சில நாள் சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், 85 வயதான பரூக் அப்துல்லாவுக்கு 2-வது முறையாக மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரூக் அப்துல்லாவுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாவும், வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்