< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
11 March 2023 12:37 PM GMT

நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரித்து ரூ.13.73 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடப்பு நிதியாண்டில், கடந்த 2022 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2023 மார்ச் 10-ந்தேதி வரை, நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரித்து ரூ.13.73 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது 2022-23 முழு நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட இலக்கில் 83% ஆகும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட நிகர வரி வசூலை விட இது 16.78% அதிகமாகும். இந்த வசூல் இந்த நிதிஆண்டிற்கான மொத்த பட்ஜெட் மதிப்பீடுகளில் 96.67% ஆகவும் நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 83.19% ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்