< Back
தேசிய செய்திகள்
ராகுல்காந்தியின் பாரத்ஜோடோ யாத்திரையில் பரூக் அப்துல்லா பங்கேற்பு
தேசிய செய்திகள்

ராகுல்காந்தியின் பாரத்ஜோடோ யாத்திரையில் பரூக் அப்துல்லா பங்கேற்பு

தினத்தந்தி
|
3 Jan 2023 1:45 PM GMT

ராகுல்காந்தியின் பாரத்ஜோடோ யாத்திரை உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.

லக்னோ,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மராட்டியம், ராஜஸ்தான், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக கடந்த 24-ம் தேதி டெல்லியை சென்றடைந்தது.

பின்னர், கடந்த 24-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் ராகுல்காந்தி உரையாற்றிய பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பாரத் ஜோடோ யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. டெல்லியில் தொடங்கிய யாத்திரை தற்போது உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்த பாரத் ஜோடோ யாத்திரையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பருக் அப்துல்லா பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, பாரத்ஜோடோ யாத்திரை காஷ்மீருக்குள் நுழையும்போது ராகுல்காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்பேன் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்