< Back
தேசிய செய்திகள்
கங்கனாவை கன்னத்தில் அறைந்தது ஏன்?  சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கம்
தேசிய செய்திகள்

கங்கனாவை கன்னத்தில் அறைந்தது ஏன்? சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கம்

தினத்தந்தி
|
6 Jun 2024 4:28 PM GMT

நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது.

சண்டிகர்:

டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பாக கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர், "100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்