< Back
தேசிய செய்திகள்
நிலப்பிரச்சினை: போலீசார் முன் தீக்குளித்த நபர்
தேசிய செய்திகள்

நிலப்பிரச்சினை: போலீசார் முன் தீக்குளித்த நபர்

தினத்தந்தி
|
19 Sep 2022 9:28 AM GMT

நிலப்பிரச்சினை தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் போலீஸ் முன் 45 வயது நபர் தீக்குளித்தார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் சிம்ரொல் நகரை சேர்ந்தவர் பன்வர் சிங் (வயது 45). இவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே சிம்ரொல் நகரில் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. பன்வர்சிங் தனது ஆதரவாளர்களிடன் நேற்று பிரச்சினைக்குரிய நிலப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு எதிர் தரப்பும் திரண்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அவ்வழியாக வந்த ரோந்து போலீசார் மோதலை தடுக்க இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், பன்வர் சிங் தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி திடீரென தீ வைத்துக்கொண்டார். இதில், அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் தீயை அணைத்து கடுமையான தீக்காயங்கள் அடைந்த பன்வர் சிங்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்குளித்த பன்வர் சிங் 41 சதவிகித காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதேவேளை, இந்த சம்பவத்தின் போது சிலர் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்