< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில்  3.6  ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
17 Aug 2023 12:04 AM GMT

காஷ்மீரின் ரஜோரியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்