< Back
தேசிய செய்திகள்
மும்பை: ரூ.13 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திவந்த நபர் கைது

image tweeted by @mumbaicus3

தேசிய செய்திகள்

மும்பை: ரூ.13 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திவந்த நபர் கைது

தினத்தந்தி
|
3 Sep 2022 11:46 AM GMT

கானாவை சேர்ந்த பயணி ஒருவர் ரூ.13 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்திவந்ததாக மும்பை விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

மும்பை,

கானாவைச் சேர்ந்த பயணி, மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ஆனார் அவர் கொண்டுவந்த உடமைகளில் ஏதும் சிக்கவில்லை.

இதையடுத்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் போதைப்பொருளை 87 மாத்திரைகளாக செய்து அதனை விழுங்கி வயிற்றுக்குள் வைத்து கொண்டுவந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் கொண்டுவந்த போதை மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அந்த நபரிடம் இருந்து மீட்கப்பட்ட 1,300 கிராம் எடையுள்ள போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.13 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அதிகாரிகள் அந்த நபரை கைதுசெய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்