< Back
தேசிய செய்திகள்
பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய போறீங்களா உஷார்...லேப்டாப் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு பெரிய கல்லை அனுப்பிய சோகம்...!
தேசிய செய்திகள்

பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய போறீங்களா உஷார்...லேப்டாப் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு பெரிய கல்லை அனுப்பிய சோகம்...!

தினத்தந்தி
|
26 Oct 2022 10:47 AM GMT

பிளிப்கார்ட்டில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உதிரி பாகங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

பெங்களூரு,

ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை ஆர்டர் செய்யும் போதும், ஆர்டர் செய்த பின்னரும் முக்கியமான சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மோசடி ஏமாற்று வலையில் சிக்க நேரிடும். அந்த வகையில்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சின்மைய ரமணா என்பவர் பிலிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது. ஆசை ஆசையாக லேப்டாப்பை பார்க்க அந்த பார்சலை திறந்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. பார்சல் பெட்டிக்குள் லேப்டாப்புக்கு பதிலாக ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உடைந்த உதிரி பாகங்களும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு உடனடியாக மெயில் அனுப்பி இருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக சமூகதளவாசிகள் ப்ளிப்கார்ட் நிறுவனத்தை வார்த்தைகளால் கொட்டி தீர்த்தனர். இதையடுத்து ரமணாவுக்கு முழு பணத்தையும் திருப்பித் தருவதாக பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்துள்ள நிலையில், இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த பெண்ணுக்கு மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட வறட்டிகள் டெலிவரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்