< Back
தேசிய செய்திகள்
சாக்லெட், பொம்மை கேட்ட 8 வயது மகளின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கொடூர தந்தை
தேசிய செய்திகள்

சாக்லெட், பொம்மை கேட்ட 8 வயது மகளின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கொடூர தந்தை

தினத்தந்தி
|
5 Jun 2023 5:20 PM GMT

8 வயது மகள் தனக்கு சாக்லெட், விளையாட பொம்மை வேண்டும் என தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயது நபருக்கு திருமணமாகி 8 வயதில் மகள் உள்ளார். இதனிடையே அந்த நபர் மதுபோதைக்கு அடிமையானதால் அவரது மனைவி அவரை விட்டு விலகி சென்றுவிட்டார். ஆனால், அந்த நபர் தனது 8 வயது மகளை வளர்த்து வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக அந்த சிறுமி தனக்கு சாக்லெட் மற்றும் விளையாட்டு பொம்மை, ஆடை வேண்டுமென தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், மதுபோதை, வறுமை காரணமாக மகள் கேட்ட சாக்லெட், பொம்மையை வாங்கி கொடுக்காமல் அந்த நபர் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், சாக்லெட், பொம்மை வாங்கி தரும்படி மகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் கடந்த சனிக்கிழமை இரவு மகளை அருகில் உள்ள பாழடைந்த கட்டிட பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கு கிடந்த கல்லை எடுத்து மகளின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மகளை கொலை செய்த கொடூர தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்