< Back
தேசிய செய்திகள்
மிட்டாய் கொடுத்து 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை; 53 வயது கட்டிட தொழிலாளிக்கு ஆயுள்
தேசிய செய்திகள்

மிட்டாய் கொடுத்து 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை; 53 வயது கட்டிட தொழிலாளிக்கு ஆயுள்

தினத்தந்தி
|
17 Sep 2022 4:07 PM GMT

7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 53 வயது நபருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கட் மாவட்டம் விக்யான் நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அம்ரித்லால் (வயது 53). இவர் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு மிட்டாய் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுவனை அம்ரித்லால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை அம்ரித்லால் மீது போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அம்ரித்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், அம்ரித்லால் மீதான வழக்கு கோடா போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அம்ரித்லால் குற்றவாளி என நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், குற்றவாளி அம்ரித்லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகள்