< Back
தேசிய செய்திகள்
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
25 Aug 2024 5:33 PM GMT

10 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்யான் டவுன் பகுதியை சேர்ந்த 32 வயது நபருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. அந்த நபர் வசித்து வரும் வீட்டின் அருகே 10 வயது சிறுமி வசித்து வருகிறார். அந்த சிறுமியை பக்கத்து வீட்டுக்காரரான 32 வயது நபர் தனது குழந்தையுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளார்.

இதை நம்பி அந்த சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 10 வயதான அந்த சிறுமியை 32 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்