< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நடுவானில் விமானத்தில் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பயணி
|15 May 2023 7:02 AM GMT
நடுவானில் விமானத்தில் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பயணி கைது செய்யப்பட்டார்.
சண்டிகர்,
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த சனிக்கிழமை பஞ்சாப் நகரின் அம்ரித்சர் நோக்கி விமானம் வந்துகொண்டிருந்தது.
அந்த விமானத்தில் பல பயணிகள் பயணித்தனர். அப்போது, விமானத்தில் பயணித்த விஜிந்தர் சிங் என்ற பயணி மதுபோதையில் விமான பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பணிப்பெண் பெண் சம்பவம் குறித்து விமானக்குழுவிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அம்ரித்சரில் விமானம் தரையிறங்கிய உடன் விமான நிலைய அதிகாரிகள் மதுபோதையில் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பயணி விஜிந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.