< Back
தேசிய செய்திகள்
மராட்டிய மாநிலம்: திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம்: திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
8 Aug 2024 10:10 PM GMT

தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மும்பை,

மராட்டிய மாநிலம் கோலாபூர் மாவட்டத்தில் உள்ள கேசவ்ராவ் போசாலே திரையரங்கில், நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்து திரையரங்கம் முழுவதும் பரவியது.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இருப்பினும் இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்