< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணை அடித்து,நெஞ்சில் மிதித்த மந்திரவாதி - அதிர்ச்சி சம்பவம்
|15 Oct 2022 10:59 PM GMT
கேரள மாநிலத்தில் பெண் மந்திரவாதி ஒருவர் பேய் ஓட்டுவதாக கூறி இளம் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பட்டணந்திட்டா மாவட்டத்திற்கு உட்பட்ட மலையாலப் புழா பகுதியைச் சேர்ந்தவர் மந்திரவாதி ஷோபனா. இவர், குறை நிவர்த்தி வேண்டி வரும் பெண்களை தாக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகி , இவருக்கு சொந்தமான மடம் ஒன்று மூடப்பட்டது.
இந்நிலையில், பேய் ஓட்டுவது என்ற பெயரில், சோபனா இளம் பெண் ஒருவரை குச்சியால் அடித்து, மிதிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.