< Back
தேசிய செய்திகள்
பாலியல் இன்பம் அனுபவிக்க முடியவில்லை போலி குற்றச்சாட்டு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி
தேசிய செய்திகள்

'பாலியல் இன்பம் அனுபவிக்க முடியவில்லை' போலி குற்றச்சாட்டு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் தொழிலாளி

தினத்தந்தி
|
4 Jan 2023 12:55 PM GMT

போலி குற்றச்சாட்டிற்கு சிறை தண்டனை அனுபவித்ததற்காக மாநில அரசு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் ( வயது 35) ஜனவரி 18, 2018 அன்று அவர் தன்னை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் கந்து மீது போலீசார் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.

ஜூலை 20, 2018 அன்று, கந்து மற்றொரு குற்றவாளி பிரேரு பெரு அமிலியர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொரு குற்றவாளி தப்பியோடிவிட்டார், டிசம்பர் 23, 2020 அன்று கந்து கைது செய்யப்பட்டார். அவரை சிறை சுமார் 2 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் விடுதலை செய்தது.

இந்த நிலையில் போலி குற்றச்சாட்டில்' 666 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்காக, 10,006 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மத்தியப் பிரதேச அரசு மீது கந்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதுகுறித்து வரது மனுவில் கூறி இருப்பதாவது:-

அவரது இழப்பீட்டு மனு, காவல்துறை தனக்கு எதிராக "தவறான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் அவதூறான அறிக்கைகளை" வழங்கியதாக குற்றம் சாட்டுகிறது மற்றும்

குடும்ப வாழ்க்கை இழப்பு மற்றும் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இழப்பு, மற்றும் மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த வரமான பாலியல் இன்பம் அடைய விடாமல் தடுத்தல் ஆகியவறிற்காக ரூ.10,000 கோடி கேட்டு உள்ளார்.

இந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் ஜனவரி 10-ம் தேதி விசாரிக்க உள்ளது என அவரது வக்கீல் விஜய் சிங் யாதவ் கூறி உள்ளார்.

இது குறித்து கந்து கூறியதாவது;-

அந்த இரண்டு வருட சிறைவாசத்தின் போது நான் அனுபவித்த துன்பங்களை என்னால் விவரிக்க முடியாது. என் குடும்பத்தாரால் உள்ளாடைகள் கூட வாங்க முடியவில்லை. சிறையில் உடைகள் இல்லாமல் வெப்பம் மற்றும் குளிர் போன்ற தீவிர காலநிலையை எதிர்கொண்டேன்.

ஜெயில் சோதனையானது தோல் நோய் மற்றும் வேறு சில நோய்களை ஏற்படுத்தியது, நான் விடுதலையான பிறகும் என்னை வேதனைப்படுத்தும் நிரந்தர தலைவலி ஏற்பட்டது. ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு "நான் இல்லாமல் அவர்கள் என்ன செய்தார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என கூறினார்.

மேலும் செய்திகள்