< Back
தேசிய செய்திகள்
எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது - இஸ்ரோ தலைவர் தகவல்
தேசிய செய்திகள்

'எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது - இஸ்ரோ தலைவர் தகவல்

தினத்தந்தி
|
26 March 2023 4:49 AM GMT

'எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட் 'ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3' என்று அழைக்கப்பட்டது.

இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தபட்டு உள்ளன. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த எல்.வி.எம்3 - எம்3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது.

இந்த நிலையில், 'எல்.வி.எம்-3' ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். புவி சுற்றுவட்டப்பாதையில் சரியாக பயணித்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த குழுவினருக்கு எனது பாராட்டுகள் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

5.9 டன் எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களை தாழ்வான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்