தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என சர்ச்சை பதிவிட்ட கேரள எம்.எல்.ஏ.
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரை 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்' என சர்ச்சை பதிவிட்ட கேரள எம்.எல்.ஏ.

தினத்தந்தி
|
12 Aug 2022 10:52 PM GMT

ஜம்மு-காஷ்மீரை ‘இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்’ என கேரள எம்.எல்.ஏ. பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த எம்.எல்.ஏ. கேடி ஜலில். இவர் அம்மாநிலத்தில் கடந்த இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் மந்திரியாக இருந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் தாவனூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட கேடி ஜலில் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

இந்நிலையில், ஜலில் கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். தனது காஷ்மீர் பயணம் குறித்து ஜலில் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்' என பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் ஜலில் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரின் பகுதி 'அசாத் காஷ்மீர்' (விடுதலை பெற்ற காஷ்மீர்) என அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில் பாகிஸ்தான் அரசின் எந்த கட்டுப்பாட்டிலும் இல்லை.

இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு -காஷ்மீரில் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பகுதிகள் உள்ளன. ராணுவ வீரர்கள் அனைத்து பகுதியிலும் இருப்பதால் காஷ்மீர் மக்கள் சிரிக்கவே மறந்துவிட்டனர். ராணுவ வாகனங்கள், ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது காஷிமீர் மக்களின் தினசரி வாழ்க்கையாக மாறிவிட்டது. காஷ்மீரின் ஒவ்வொரு பகுதியிலும் ஒருவித அலட்சியம் நிலவுகிறது' என பதிவிட்டிருந்தார்.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் என பதிவிட்ட ஜலில் மீது கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து அவர் தனது பதிவை திருத்தி எழுதியுள்ளார்.

அசாத் காஷ்மீர் (விடுதலை பெற்ற காஷ்மீர்) என்பதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என எடிட் செய்துள்ளார்.

சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் ஜலில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் என பதிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்