< Back
தேசிய செய்திகள்
1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது மோடி அரசு : ஐஎம்எப் முன்னாள் இயக்குநர்
தேசிய செய்திகள்

1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது மோடி அரசு : ஐஎம்எப் முன்னாள் இயக்குநர்

தினத்தந்தி
|
6 May 2024 9:53 AM GMT

வாஜ்பாய் மற்றும் மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று சுர்ஜித் பல்லா கூறினார்.

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக ஐஎம்எப்-ன் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குநரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு காணொலி மூலமாக நேற்று அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

வாஜ்பாய் மற்றும் மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அரசின் கீழ் கடந்த 7-8 ஆண்டுகளில் 10 மில்லியன் அதாவது சுமார் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.அதேசமயம், 2004-2013 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் மிக குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன" என்றார்.

மேலும் செய்திகள்