< Back
தேசிய செய்திகள்
இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது - அமெரிக்க மாணவர்களிடையே மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதம்
தேசிய செய்திகள்

இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது - அமெரிக்க மாணவர்களிடையே மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதம்

தினத்தந்தி
|
14 Oct 2022 1:08 AM GMT

தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஒருசில முக்கியமான பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு 5ஜி தொழில்நுட்பம் உருவானது.

வாஷிங்டன்,

அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியின் மாணவர்களுடன் உரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது;-

இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது. தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஒருசில முக்கியமான பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு 5ஜி தொழில்நுட்பம் உருவானது.

5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனையைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம்.5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.2024-க்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் 5ஜி சேவைப் பெற முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 5ஜி சேவையை முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணாசி ஆகிய முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்