< Back
தேசிய செய்திகள்
வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் அபியாஸ் - அதிவேக வான்வழி இலக்கு சோதனை வெற்றி!
தேசிய செய்திகள்

வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" - அதிவேக வான்வழி இலக்கு சோதனை வெற்றி!

தினத்தந்தி
|
29 Jun 2022 11:46 AM GMT

வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் “அபியாஸ்” விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

பாலசோர்,

வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் "அபியாஸ்" விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, அதன் வானூர்தி வளர்ச்சி ஸ்தாபனத்தால் 'அபியாஸ்' வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்சிலிருந்து (ஐடிஆர்) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, அதிவேக வான்வழி இலக்கு(ஹீட்) வாகனமான அபியாஸ், வானில் பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அபியாஸ் காண்பதற்கு சிறிய ரக விமானம்போல இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த உயரத்தில் இந்த விமானத்தின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அதிக சூழ்ச்சித்திறன் உட்பட, பல விஷயங்கள் சோதனை செய்யப்பட்டன.

அபியாஸின் விமான சோதனை வெற்றிகரமாக நடந்ததற்காக டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படைகளுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்