< Back
தேசிய செய்திகள்
பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் - கேரள ஐகோர்ட்டு அதிரடி
தேசிய செய்திகள்

பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் - கேரள ஐகோர்ட்டு அதிரடி

தினத்தந்தி
|
1 Oct 2022 7:28 AM GMT

கேரள ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்.,

கேரளாவில் யூடியூப் சேனல் பெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் தொடர்பாக நடிகர் ஸ்ரீநாத் பாசி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இது குறித்த விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்த போது, புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி கோர்ட்டில் தெரிவித்துள்ளார். தன்னை அவமானப்படுத்தியதையும், அநாகரீகமாக பயன்படுத்தியதாக தொடர்ந்த புகாரை தொடர விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கேரள ஐகோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்