< Back
தேசிய செய்திகள்
அக்காவுடன் நடைபயிற்சி சென்ற 5 வயது சிறுவனை கடித்துக் கொன்ற தெருநாய்கள்! அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

அக்காவுடன் நடைபயிற்சி சென்ற 5 வயது சிறுவனை கடித்துக் கொன்ற தெருநாய்கள்! அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
12 Jun 2022 9:06 PM IST

நாக்பூர் மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள காடோல் நகரில், தெருநாய்கள் கடித்துக் குதறியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காடோல் நகரின் தந்தோலி பகுதியில் ஐந்து வயது சிறுவன் விராஜ் ராஜு ஜெய்வர், தனது அக்காவுடன் நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றிருந்தபோது, திடீரென அவர்களை தெருநாய்கள் சுற்றி வளைத்தன. இதைப் பார்த்த அவனது அக்கா, உதவிக்காக அலறத் தொடங்கினார்.

ஆனால் அதிகாலையில் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாரும் உதவிக்கு வரவில்லை.

சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்கள், ஒரு கட்டிடத்திற்குள் அவனை இழுத்துச் சென்றன. உடனடியாக அப்பகுதிக்கு வந்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் நாய்களை விரட்டிவிட்டு அச்சிறுவனை மீட்டனர்.

படுகாயமடைந்திருந்த சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

5 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்