< Back
தேசிய செய்திகள்
நிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவிப்பு
தேசிய செய்திகள்

நிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Aug 2024 12:27 PM GMT

நிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோர் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் நிலவும் மோசமான நிதி நெருக்கடியின் காரணமாக, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் தானும், தனது மந்திரிகள் குழுவும், சட்டமன்ற செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள் ஆகியோரும் அடுத்த 2 மாதங்களுக்கான தங்கள் சம்பளம் மற்றும் படிகளை கைவிடுவதாக அறிவித்தார்.

மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த அறிக்கையில், மாநில வருவாயை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த நடவடிக்கைகளின் பலன்கள் செயல்பட நேரம் எடுக்கும் என்று சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியை தணிக்க உதவுவதற்காக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்த முடிவை பின்பற்ற வேண்டும் எனவும், அவர்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்