< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் என்கவுண்டர்: ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்புபடை அதிரடி
தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டர்: ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சுட்டுக்கொலை - பாதுகாப்புபடை அதிரடி

தினத்தந்தி
|
11 Jun 2022 1:34 AM GMT

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் குல்கம் மாவட்டம் காண்டிபுரா பகுதியில் பங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசார், பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

மேலும் செய்திகள்