< Back
தேசிய செய்திகள்
இமாசல பிரதேசத்தில் கனமழை; 12 பிரதான சாலைகள் மூடல்
தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் கனமழை; 12 பிரதான சாலைகள் மூடல்

தினத்தந்தி
|
11 July 2024 10:44 PM GMT

இமாசல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் நீடித்து வருகின்றன.

இதற்கு மத்தியில் சம்பா மாவட்டத்தின் பார்மர் பகுதியில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கொய்நல்லா மற்றும் டோனாலி இடையே ஏற்பட்ட இந்த பேரிடரால் அப்பகுதி வழியாக போக்குவரத்து முடங்கி இருக்கிறது. குறிப்பாக அடுத்த மாதம் தொடங்க உள்ள மணிமகேஷ் யாத்திரைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 12 பிரதான சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக சிம்லாவில் 5, மாண்டியில் 4, காங்ராவில் 3 என சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

மாநிலத்தின் தொலைதூர பகுதிகளுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்