< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் வருகிற திங்கள் முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஆந்திராவில் வருகிற திங்கள் முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள்

தினத்தந்தி
|
1 April 2023 6:22 PM GMT

ஆந்திராவில் வருகிற திங்கள்கிழமை முதல் 1-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயவாடா,

கோடை காலத்தை முன்னிட்டு ஆந்திராவில் வருகிற திங்கள்கிழமை முதல் 1-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையை போன்று இந்த ஆண்டும் ஆந்திராவில் வருகிற 3-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இந்த மாதம் 30-ந்தேதி பள்ளி கடைசி வேலைநாளாகும். ஏப்ரல் 2-வது சனிக்கிழமை, வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு 2-வது சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தை முன்னிட்டு பள்ளிகளில் கிராம பஞ்சாயத்துகளின் ஆதரவுடன் போதுமான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் எஸ் சுரேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், திறந்த வெளியிலோ அல்லது மரத்தடியிலோ வகுப்புகளை நடத்துவதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ள அவர் மதிய உணவுடன் மோர், பால் வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்