< Back
தேசிய செய்திகள்
தலைசிறந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்: பிரதமர் மோடி புகழாரம்
தேசிய செய்திகள்

தலைசிறந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்: பிரதமர் மோடி புகழாரம்

தினத்தந்தி
|
16 Jan 2024 5:35 AM GMT

திருவள்ளுவரின் போதனைகள், நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"தலைசிறந்த தமிழ்ப்புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள், நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது.

நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்