< Back
தேசிய செய்திகள்
சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சிமி அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தினத்தந்தி
|
29 Jan 2024 1:26 PM GMT

பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் ஈடுபட்டதற்காக இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும், பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களிலும் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிமி மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது முதன்முதலில் சிமி இயக்கம் தடை செய்யப்பட்டது, அதன் பிறகு ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும் சிமி அமைப்பின் மீது ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்