< Back
தேசிய செய்திகள்
சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி - ஆரன்முலாவில் இருந்து 23-ந்தேதி புறப்பாடு
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி - ஆரன்முலாவில் இருந்து 23-ந்தேதி புறப்பாடு

தினத்தந்தி
|
8 Dec 2022 7:05 PM GMT

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வரும் 23-ந்தேதி சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

திருவனந்தபுரம்,

பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மண்டல பூஜைக்காக இந்த அங்கி வரும் 23-ந்தேதி சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து 26-ந்தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வரும் அந்த அங்கி, மாலை சந்நிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்