< Back
தேசிய செய்திகள்
சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில்  மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது
தேசிய செய்திகள்

சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது

தினத்தந்தி
|
18 Sep 2022 6:37 AM GMT

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொகாலி,

பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் அங்கு பயிலும் மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது.

ஆனால், எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரே இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்திலும் கசிய விட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்தே மாணவர்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் பரவியாதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் பெற்றோர்களும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட மாணவி தனது செயலை ஒப்புக்கொண்டதாகவும் தற்போது போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வீடியோக்கள் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாணவிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசாரும் மறுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்