< Back
தேசிய செய்திகள்
நாய் கடித்தது குறித்து பெற்றோரிடம் கூறாத சிறுவன் - ரேபிஸ் நோயால் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

நாய் கடித்தது குறித்து பெற்றோரிடம் கூறாத சிறுவன் - ரேபிஸ் நோயால் உயிரிழப்பு

தினத்தந்தி
|
5 Sep 2023 7:38 PM GMT

நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறாத சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஷவாஷ். இதனிடையே, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு சிறுவனை அவரின் பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் நாய் கடித்துள்ளது.

நாய் கடித்தது குறித்து சிறுவன் ஷவாஷ் தன் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. பயத்தால் சிறுவன் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சரிவர சாப்பிடாமலும் இருந்துள்ளான். இது குறித்து பெற்றோர் சிறுவனிடம் கேட்டபோது தன்னை நாய் கடித்ததாகவும், அது குறித்து உங்களிடம் கூறாமல் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்தான்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டுள்ளதாகவும், நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் ஷவாஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்