< Back
தேசிய செய்திகள்
டெல்லி: ஜி20 மாநாட்டையொட்டி 3 நாட்கள் மூடப்படும் மத்திய அரசு அலுவலகங்கள்
தேசிய செய்திகள்

டெல்லி: ஜி20 மாநாட்டையொட்டி 3 நாட்கள் மூடப்படும் மத்திய அரசு அலுவலகங்கள்

தினத்தந்தி
|
25 Aug 2023 6:49 PM GMT

ஜி20 மாநாட்டையொட்டி டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படுகிறது.

புதுடெல்லி,

இந்த ஆண்டிற்கான ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தவிருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் வைத்து பிரமாண்டமாக மாநாட்டை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் ஜி20 மாநாட்டையொட்டி டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 8 தொடங்கி 10-ந்தேதி வரையிலான 3 நாட்களுக்கு மட்டும் மத்திய அரசு அலுவலகங்கள் மூடப்படுகின்றன. இந்த தகவல் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்