< Back
தேசிய செய்திகள்
ஜி-20 உச்சி மாநாடு; டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறை:  கெஜ்ரிவால் அறிவிப்பு
தேசிய செய்திகள்

ஜி-20 உச்சி மாநாடு; டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறை: கெஜ்ரிவால் அறிவிப்பு

தினத்தந்தி
|
22 Aug 2023 4:29 PM GMT

ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை விட கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கும்படி டெல்லி தலைமை செயலாளரிடம் டெல்லி போலீசார் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர்.

இதேபோன்று, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

இந்த நிலையில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை என அறிவிக்க முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்து உள்ளார். இந்த தேதிகளில் அனைத்து பள்ளிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்.

மேலும் செய்திகள்