< Back
தேசிய செய்திகள்
கோவாவில் விமான பணிப்பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பயணிகள்
தேசிய செய்திகள்

கோவாவில் விமான பணிப்பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பயணிகள்

தினத்தந்தி
|
8 Jan 2023 4:21 PM GMT

விமான பணிப்பெண்களிடம் 2 வெளிநாட்டுப் பயணிகள் அத்துமீறி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பனாஜி,

கோவாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட மோபா விமான நிலையத்தில், மும்பை செல்லும் விமானத்தில் 2 வெளிநாட்டுப் பயணிகள் ஏறியுள்ளனர். அவர்கள் அங்குள்ள விமான பணிப்பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து விமான ஒழுங்குமுறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மோபா விமான நிலைய அதிகாரிகளிடம் 2 வெளிநாட்டுப் பயணிகளும் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்