< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு ஏரிகளில் அடிக்கடி செத்து மிதக்கும் மீன்கள்
தேசிய செய்திகள்

பெங்களூரு ஏரிகளில் அடிக்கடி செத்து மிதக்கும் மீன்கள்

தினத்தந்தி
|
27 Sep 2022 6:45 PM GMT

பெங்களூரு ஏரிகளில் அடிக்கடி மீன்கள் செத்து மிதக்கின்றன

பெங்களூரு:


பெங்களூருவில் பல பகுதிகளில் ஏரிகள் உள்ளன. இந்த நிலையில் ஏரிகளில் கலக்கும் கழிவுநீரால், அவ்வப்போது மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த நிலையில் கிழக்கு பெங்களூரு பகுதியில் உள்ள நல்லூர்ஹள்ளி அருகே சீலவந்தா ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதந்தன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தற்போது தான் தெரியவந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால், மீன்கள் செத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்