< Back
தேசிய செய்திகள்
பெண், கத்தியால் குத்திக்கொலை; கணவர் போலீசில் சரண்
தேசிய செய்திகள்

பெண், கத்தியால் குத்திக்கொலை; கணவர் போலீசில் சரண்

தினத்தந்தி
|
24 Aug 2022 4:31 PM GMT

பெண்ணை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

பெங்களூரு: பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.சி.பால்யா பகுதியை சேர்ந்தவர் ஜான் சுப்ரீத்(வயது 34). இவரது மனைவி நான்சி ப்ளோரா(30). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நான்சியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஜான் கடந்த சில மாதங்களாக அவரிடம் தகராறு செய்து வந்தார். இதுபோல நேற்று முன்தினம் மாலையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் நான்சியிடம், ஜான் தகராறு செய்தார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த ஜான், நான்சியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த நான்சி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ஜான், நான்சியை கொலை செய்ததாக கூறி போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து ஜானை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்ற போலீசார் நான்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்