< Back
தேசிய செய்திகள்
நாராயணபுரா அணையில் மூழ்கி தந்தை-மகன் சாவு
தேசிய செய்திகள்

நாராயணபுரா அணையில் மூழ்கி தந்தை-மகன் சாவு

தினத்தந்தி
|
19 Nov 2022 6:45 PM GMT

ராய்ச்சூரில் நாராயணபுரா அணையில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழந்தனர்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா பாலகதின்னி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவரது மகன் லக்கப்பா (5). இந்த நிலையில் நேற்று பாலகதின்னி கிராமத்தில் உள்ள நாராயணபுரா அணையின் நீர்தேக்க பகுதிக்கு ரமேசும், லக்கப்பாவும் சென்று இருந்தனர். நீர்தேக்க பகுதியில் நின்று விளையாடி கொண்டு இருந்த லக்கப்பா எதிர்பாராதவிதமாக நீர்தேக்கத்தில் தவறி விழுந்தான்.

இதனால் அவர் நீரில் மூழ்கி தத்தளித்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ், நீர்தேக்கத்தில் குதித்து லக்கப்பாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் 2 பேரும் நீர்தேக்கத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் முட்கல் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து முட்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்