< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கரடி தாக்கியதில் விவசாயி சாவு
|10 Aug 2022 9:48 PM GMT
உத்தரகன்னடாவில் கரடி தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
உத்தரகன்னடா:
உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி தாலுகா தேவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஓம்கார் ஜெயின் (வயது 52). விவசாயி. இவர் நேற்று மதியம் தனது விவசாய நிலத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி ஓம்கார் மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் ஓம்கார் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் விரைந்து வந்து கரடியை விரட்டி அடித்தனர். பின்னர் ஓம்காரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கரடி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த ஓம்கார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிர்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.