< Back
தேசிய செய்திகள்
மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை
தேசிய செய்திகள்

மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
26 Sep 2022 8:49 PM GMT

பெங்களூரு அருகே மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புரா டவுன் பகுதியை சேர்ந்தவர் ராமன்ஜினப்பா (வயது 68). விவசாயி. இவரது மனைவி லட்சுமம்மா. இந்த வயதான தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமம்மா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்தார். மனைவி இறந்த தகவல் தெரிந்து துக்கத்தில் ராமன்ஜினப்பா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்