< Back
தேசிய செய்திகள்
சல்லகெரே வனப்பகுதியில்  விவசாயி எரித்து கொலை
தேசிய செய்திகள்

சல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை

தினத்தந்தி
|
20 Sep 2023 6:45 PM GMT

சல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சித்ரதுர்கா-

சல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வனப்பகுதி

சித்ரதுர்கா மாவட்டம் சல்லகெரே தாலுகா நல்லதாரே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் எரிந்த நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் ஒன்று கிடந்தது. இதனை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, அவர்கள் உடனே சல்லகெரே போலீசிற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சல்லகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எரித்து கொலை

விசாரணையில், அந்த நபர் தாவயஹள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தப்பா வயது (55). விவசாயி. இவர் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு அருகே உள்ள கிராமமான நல்லதாரே வனப்பகுதியில் விட்டு வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஆடுகளை அவர் மேய்ச்சலுக்காக அழைத்து வந்துள்ளார். ஆனால் அவருடன் வந்த நபர்கள் யார் என்பது தெரியவில்லை. ஆடு மேய்ப்பவர்களுடன் ஏற்பட்ட மோதலில் சித்தப்பாவை மர்மநபர்கள் எரித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்களுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்